Friday, August 20, 2010

மேல்பாடி நினைவுகள்

அப்பாவுக்கு மூன்று வருஷத்துக்கு ஒரு முறை மாற்றல் வரக்கூடிய அலுவலகம்
நிறைய ஊர் மாற்றாலாகி போனோம். அதல என்க்கு விவரம் தெரிஞ்ச ஊரோ இல்ல நான் ரொம்ப அனுபவிச்ச ஊரோ தெரியலை .இந்த மேல்பாடி மட்டும் ரொமப பிடிச்சி போச்சு.
ஊர சுத்தி மலை. மலைக்கு பக்கதிலேயே இருக்கற மாதிரி ஈபி குவார்ட்டர்ஸ் நாலே வீடுதான் ஸ்கூலுக்கு வள்ளிமலை போகனும் நாலு கிலோமீட்டர் இருக்கும்னு தோனறது. நடந்து தான் போகனும்.
ஜாலியான ஊர்தான் காத்தால அம்மா டிபன் பாக்ஸ்ல மதியம் சாப்ட குடுக்கற சாதத்தை போற வழியிலேயே பம்புசெட்டுல உட்கார்ந்து சாப்டுவோம். தயிர் சாதம் தொட்டுக்க பெரிசா நறுக்கின மாம்பழ துண்டு. மாம்பழ சீசன் இல்லாதப்ப நொய்கஞ்சி மோர் மிளாகய் போட்டு என்ன ஒரு டேஸட்... இப்ப கூட அதமாதிரி சாப்படனும்னு ஆசையாதான் இருக்கு. அம்மாவுக்கு உருகி உருகி பேச தெரியாது பாசத்தை வெளிகாட்டி பெரிசு பண்ண தெரியாது. ஆனா அம்மாவுக்கு எங்க மேல இருக்கிற அன்பு எங்களுக்கு மட்டுமே தெரியும் துக்கமோ சநதோஷமோ வெளிபடுத்த தெரியாத அம்மா.. ஆனா எனக்கு தலை வாரும்போது
நான் மழைல நனைஞ்சிண்டு வீட்டுக்குள்ள வரும்போது தலை துவட்டறச்ச ,சாம்பிராணி போடும் போது ,அதுல ஒரு அன்பு தெரியத்தான் செய்யும். மேல்பாடி நினைவுகளும் வள்ளிமலை நினைவுகளும் இன்னும் அப்படியே படம் பிடித்தது போல என்னுள் இருக்கிறது.


இன்னும் சொல்கிறேன்.

2 comments:

  1. Thank to recall our child hood memories. good Posting. Keep it up.

    Even my age at that time is less than 5 years, I can recall fun in Gowri Akka's marriage held at Vallimalai.

    Had a puliyangkai with salt (rubbed with the help of road side Rocks etc.

    Now only I found your blog in the net and I am going back to the 27 years and recall my olden days with our family members.

    ReplyDelete
  2. மோஹன் ப்ள்க் பர்ர்த்த்து நல்ல்து சந்தொஷம் நேர்ம் கிடைகும்பொது பர்ரு

    ReplyDelete