ஜெயந்திமணி
சில அனுபவங்கள், சில உணர்வுகள்,சில உறவுகள்,இத்துடன் கொஞ்சம் என் உளரல்களும் கூட...
Saturday, December 24, 2011
Saturday, December 10, 2011
அத்தை எப்போ வருவரோ?
அத்தை.................மகாலட்சுமி....எங்களுக்கெல்லாம் மாச்சி ஆத்தை. அத்தைக்கு சுகர் ஒரு கால எடுத்துட்டா ஆஸ்பத்திரில இருந்து அமுதா போன் பண்ணி அத்த செமி கோமால இருக்கா நீ வந்து பாத்துட்டு போன்னு சொன்னாள். நல்லதோ கெட்டதோ உடனே என்னோட பகிர்ந்து கொண்டுவிடனும் அமுதாவுக்கு.
சென்னைக்கு போய் அத்தைய பார்த்துட்டு வரலாம்னு கிளம்பினோம் எந்த ஒரு பங்ஷன்ல அத்தைய பார்த்தாலும் நீ மட்டுதான் கல்யாணம் ஆன நாள்ளேர்து ஆத்துக்கு வரல அப்படின்னு சொலலுவார். . இப்ப வரையா ?அப்படின்னு வேற கேப்பா எப்பவும் போக நேரமே இருக்காது. நானும் வரேன் அத்தன்னு நேரம் கிடைக்கறச்ச வரனே;னு சொலலுவேன். அத்தைக்கு எங்க மேல (கோண்டு அண்ணா பசங்க) ஆசை ரொம்ப அதிகம் அத்தைக்கு குழந்தைகள் கிடையாது. நான் சின்ன பொண்ணா இருக்கும் போது ஸ்கூல் லீPவ் விட்டா அம்பத்தூரில் பெரிப்பா ஆத்துக்கு போவோம். அப்ப அத்த எங்களைஅவா ஆத்துக்கு கூட்டிண்டு போவா. அத்தை கவர்ண்மெண்ட ஸ்கூல்டீச்சர். வீட்டுக்கு போனா எங்கப் பார்த்தாலும் நாய்குட்டி பூனைக்குட்டி .கிளி. அணில் குரங்கு எல்லாம் இருக்கும். எல்லாத்துக்கும் பேர் வச்சிருப்பா. சேர்;ல நாய் படுத்துண்டு இருக்கும் சமையலறை மேடை கீழே பூணை இருக்கும் மொதல்ல போகும்போது பயமா இருக்கும். கொஞ்ச நேரம் போக போக அத்த அதுங்ககிட்ட பழகறது பேசறது எல்லாம் பார்க்கும்போது அத்தைக்கு நாங்களும் அதுவும் ஒண்ணுதான் புரியும். நாமும் அதுங்களோட பழகிடுவோம். வரும் போது அதுக்கும் டாடா சொல்லிட்டுதான வருவோம்.
அத்தைய நினைக்கும்போது நிறைய நேரம் பெருமையாக தான் இருக்கும். தனக்கு குழந்தை இல்லை என்று வருத்தப்பட்டது கிடையாது. உறவுகளில் மிகவும் பின்னடைந்தவர்களுக்கு (பொருளாதாரத்தால் உடலால் மனத்தால் உறவுகளால்) அத்தை ஒரு ஆலமரம் சுந்தர் பையன் கார்த்திக் (சுந்தர் அண்ணாச்சி சித்தப்பா பையன். அண்ணாச்சி சித்தப்பாவே உடன் பிற்நதவர்களால் புறக்கணிக்கப்பட்டவர்) மனவளர்சி குன்றிய ஒரு மாற்றுதிறனாளி. அவனுடைய பெற்றவர்களே அவன் தன் மகன் என்று வளர்க்க பிரியப்படாத போது அவனை தன் மகனாக வளர்த்து. எல்லா பஙஷனுக்கும் கூ;;ப்டுண்டு வருவா .யாரவது அவனை தப்பா சொன்னலோ அருவருப்பாய் பார்த்தலோ அத்தைக்கு கோபம் வரும் . செல்லுமிடம் என்றால் சண்டைபோடுவார் இல்லையெனில் கிளம்பி விடுவார்.
கட்டிலில் அத்தைய பார்த்தேன் ஐயோ என்று இருந்தது. ஐசியுவிலிருந்து இப்பதான் நார்மல் வார்டுக்கு கொண்டு வந்திருந்தா. நாப்பது நாளா பேசவே இல்லையாம். நூன் ;போனதும் அமுதா சொன்னா ”அத்த திருச்சியிலிருந்து கோண்ணா பொண்ணு ஜெயந்தி வநதிருக்கா” அப்படிண்னு சொலலும் போது ”வா சந்தோஷம் ” அப்படின்னு சொன்னா திருப்பி நிறைய பேசும்போதும் சில நினைவுடன் சொன்ன பதிலாகவும் சிலது நினைவற்ற நிலையில் சொன்னதாவும் தெரிந்தது. ஆனாலும் அத்ததைய உயிருடன் பார்த்தோமே என்ற ஒரு நிறைவு எனக்கு. அத்திம்பேர் பார்க்க பாவமாக இருந்தது. சாப்பிடவில்லை ஷேவ் செய்யாத முகம் தன் துணையின் அவஸ்தைகள் அவர் முகத்திலும் மனதிலும் பிரதிபலித்தது. 'ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் இருந்தும் என்ன என் வேர் என நீ இருந்தாய் அதில் நான் விழுந்து விடாதிருந்தேன்' இநத பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது. ஆமாம் நான் பார்த்துவிட்டு வந்து பதினைந்து தினங்களில் அத்தை எங்களைவிட்டு இறைவனடி சேர்ந்து விட்டார்.
வாய் பேச முடியாத ஜிவன்களக்கும்…..கார்திக் போன்ற கடவுளின் குழந்தைகளுக்கும் அத்தை எப்போ வருவரோ?